Wednesday, August 8, 2018

chapter 5ஓ இனிய ஃபின்லாந்த்தே ஃபின்லாந்த்தே

ஓ இனிய ஃபின்லாந்த்தே  ஃபின்லாந்த்தே  !
கலைச்செல்வி இராமனாதன்.T, திருச்சி


2013 December ல் நகரத்தார் மலரில் வெளிவந்த கட்டுரை 

நான் இரண்டு  முறை (2005, 2009)  பின்லாந்து சுற்றுப்பயணம்  மேற்கொண்டு,  ஃபின்லாந்தைப் பற்றி நீண்டதொரு தொடர்  பயணக் கட்டுரை  எழுதி,
 நகரத்தார் மலரில் வெளிவந்துள்ளது. இப்போது , மூன்றாவது முறையாக அண்மையில்(2013ல் ) அங்கு சென்று வந்தோம்.

இப்போது  ஒரு சில முக்கிய அனுபவங்களை மட்டும் தங்களுடன் மீண்டும்  பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆமாம்,  "Finland has the lowest crime rates in the world” என்பாது சாதாரணமான விஷயமல்ல . "ஃபின்லாந்து உலகிலேயே மிகக் குறைவான தவறுகள் நடக்கும் தேசம்" என்பது மிகவும் உண்மை . அதுவும் நூற்றுக்கு நூறு உண்மை. . ஒரு சின்ன நிகழ்வை பகிர்கின்றேன் .

 எனக்கு எப்போதுமே என் மகன் கண்ணன் வீட்டிற்கு அருகிலிருக்கும் ரோஜாச் செடியிலிருந்து பூப்பறித்து வைத்துக் கொள்ளும் பழக்கம் உண்டு. அதே போல் நான் நம் தாயகத்திற்குப் புறப்பட்டு வரும் நாளன்று - ஆகஸ்ட் 27, 2013 அன்று அதிகாலை மூன்று மணி இருக்கும், நான்
தனியாக எல்லா நகைகளும் போட்டபடி அமைதியாக அதே இடத்திற்கு நடந்து சென்று அதே செடியிலிருந்து அந்த ரோஜா மலரைப்பறித்துத் தலையில் சூட்டிக் கொண்ட போது, எனக்கு மனநிறைவு ஏற்பட்டது மட்டுமன்றி, நம் தேசப் பிதா காந்தியடிகள் கூறிய வாசகமும் நினைவிற்கு வந்தன.

எப்போது ஒரு பெண் தன்னந்தனியாக எல்லா நகைகளையும் போட்டுக் கொண்டு நடு இரவில் பயமின்றி நடந்து வர முடிகின்றதோ, அன்று தான் நம் நாடு சுதந்திரம் அடைந்த நாடாக நாம் கருத முடியும்” என்பதே, நம் நாடும் ஃபின்லாந்து தேசம் மாதிரி மாறாதா?"  என்று ஒரு சின்ன ஏக்கமும் என்னுள் தோன்றியது அப்போது.

அடுத்ததாக நம் கண்களுக்குக் குளிர்ச்சியூட்டும், ஒரு இளஞ்ஜோடிகளின் குறும்புத் தனத்தை, நான் ரசித்த காட்சியை எழுதட்டா? ஒரு அழகான ஃபின்னிஷ் பெண் (ஆம், பதின்மர் வயது - Teen age) அதே போல் ஒரு அழகா ஃபின்னிஷ் பதின்மர் வயதுப் பையன் (சுருட்டைத் தலையுடன் கூடிய Teen age பையன் ) இருவரும் ஒரு உணவகத்தில் எதிர் எதிரே அமர்ந்திருந்தனர்,  என் மகன் வீட்டிற்கு அருகிலிருக்கும்  அந்த   உணவகத்திற்கு நானும், என் துணை வரும், எங்கள் மகன், மருமகளுடன், பேத்தி ஆர்த்தி, பாரதியுடன் ஏதாவது snacks சாப்பிடுவோமே என்று ஒரு மாலை நேரப் பொழுதில் சென்றிருந்தோம் .
அந்த உணவகத்திற்குச் சென்றால் பெரும்பாலும் நாங்கள் விரும்பி வாங்குவது உருளைக்கிழங்கு Finger chips தான். சின்னச் சின்னக் கப்புகளில் தக்காளி Sauce உடன் தருவார்கள். அதே போல் அன்றும் நாங்கள் Finger chips வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, என்ன நடந்தது என்றால்,  அந்த இளம் பெண் ஒவ்வொரு  Finger chips ஆக எடுத்து, சிரித்து சிரித்துக் கொண்டே ஏதேதோ அவர்கள் மொழியில் கலாய்த்துக் கொண்டு, அந்த இளம் பையனின் வாயில் தூக்கி தூக்கிப் போடுவதும், அந்தப் பதினெட்டு வயதுப் பையன் ஆ ஆ வென்று வாயைத் திறந்து Catch வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டே கலாய்த்துக் கொண்டிருப்பதும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. அப்படியே அந்தத் தட்டிலிருந்த அத்தனை Finger chips ஐயும் அந்தப் பையன் ஸ்வாஹா செய்தது வேடிக்கையான  காட்சியாக இருந்தது. அப்போது அந்த இளம்பெண் முகத்தில் தெரிந்த சிரிப்பு, அடேயப்பா, மறக்க முடியாது. வாழ்க அந்த இளம் ஜோடி..


இன்னும் ஒரு சில மறக்க முடியாத நிகழ்வுகளுடன் இந்தச் சிறிய கட்டுரையை நிறைவு செய்கிறேன்.  ஃபின்லாந்தில் ஒரு தீவில் உள்ள மிகப் பெரிய மிருகக் காட்சி சாலைக்குச் சென்றிருந்தோம். இயற்கையான மிக மிக அடர்த்தி யான செடி கொடிகள் அடங்கிய சூழ்நிலையில் அமைக்கப்பட்ட மிருகக் காட்சி சாலை அது. அவ்வளவு பெரிய இடத்தில், நான் மட்டும் தனியாக விடப்பட்டு எப்படியோ, செரீனா என்ற நல்ல மனம் உடைய ஒரு ஆங்கிலப் பெண்ணின் உதவியால், நான் பத்திரமாக வீடு வந்து சேர்ந்தேன் என்பது ஒரு தனிக்கதை. குறிப்பாக இந்த சம்பவத்தை நான் ஏன் எழுத வருகிறேன் என்றால், தயவு செய்து இதைப் படிக்கும் அனைவரும், எங்கு சென்றாலும் தாங்கள் Cell - Phone Battery Full charge with contact numbers அவசியம் வைத்துக் கொள்ளுங்கள். Cell Phone ம் இல்லாமல், நான் அன்று மிகவும் பயந்து போய்விட்டேன். அதுவும் அந்நிய தேசத்தில். ஆகவே என்றும் Cell Phone சேவை அனைவர்க்கும் எக்கணமும் தேவை என்பதே என் அன்பான அறிவுரை.


நாங்கள் தாயகம் வருமுன் என் ஐந்து வயதுப் பேத்தி பாரதியிடம் ""Will you Come to India with us? ” என்று கேட்ட போது, அக்குட்டிப் பெண்,  சுட்டிப் பெண் கூறிய பதில், "Yes, I'II Come, but olivia also should come and also Choko too" என்றாளே பார்க்கலாம். Olivia - அவளுடன் படிக்கும் குட்டிப் பெண். (Choko - Olivia வீட்டில் வளர்க்கும் செல்ல நாய்க்குட்டி ! போதுமா.?!

முன்பே ஒரு முறை எழுதியுள்ளேன். இங்குள்ளவர்கள் ஆசை ஆசையாய், அருமை அருமையாய் அப்படி அன்புடன் பாசத்துடன், தங்கள் நாய்க்குட்டி களை, பெற்ற, குழந்தைகளுக்கு மேல் பார்த்துப் பார்த்து வளர்க்கிறார்கள் என்று
இந்த முறை பின்லாந்தில் இருக்கும் சமயம் ஜூலை 9 ,என் பிறந்த தினத்தை பெயர்த்தி களுடன் விமரிசையாகக் கொண்டாடினேன். பூத்துக் குலுங்கும் பின்லாந்து நாட்டை விட்டு பிரிந்து வர மனமின்றி , பிரியா விடை பெற்று தாயகம் வந்தடைந்தோம்.

என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு 




- திருமூலர் திருமந்திரம்


வாழ்க வளர்க




No comments:

Post a Comment